நடுவண் அரசால் எரிவாய்வு திட்டங்கள் ஏன் தமிழகத்தில் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன? இந்திய பொருளாதாரம் இறக்குமதி செய்யப்படும் பெர்டோலிய பொருட்களை சார்ந்த இருக்கிறது, அதிகமான பணம் இதற்காக செலவு செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியை சரி செய்துவிட்டால் சுலபமாக முன்னேறலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது, நாட்டில் சில இடங்களில் எரிவாய்வு இருப்பதை சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வுசெய்தனர். அதை செயல்படுத்த தேவையான பணம் இவர்களிடம் இப்போது இருக்கிறது, பிறகு இவர்களுக்கு தேவையான இடம்தான் பிரச்னை, கடைசியாக இவர்கள் தேர்தெடுத்த இடம்தான் என் தமிழ்நாடு. இங்கே செய்யப்படுத்த முக்கியமான காரணிகள், கடற்கரை பகுதிகள் நிறைந்த இடம், பாதுகாப்பு, பயனற்ற/எதிர்கால பயனற்ற நிலம். பாதுகாப்பில் பார்க்கும்போது வட இந்தியாவில் வாய்ப்புஇல்லை ஏனென்றால் போர் மூளும் சூழல் வருந்தபோது இந்த பெர்டோல் லிய அலைகளே அவர்களில் இலக்காக இருக்கும். அப்படி பார்க்கும் போது தென் இந்தியாவே இதற்கு வழி. ஆந்திராவில் கடற்கரை பகுதிகள் அதிகம் அனால் இப்பொழுது இருக்கும் பிளவுபட்ட ஆந்திரா அரசியல் சூழலில் அங்கே இவர்கள் செயல்படுத்த முற்பட...
NEET - இதனால் நடுவண் அரசு செய்ய விரும்புவது சுலபமாக நிறைவேறும். ஹிந்தியை தென்மாநிலங்களில் முக்கியமாக தமிழகத்தில் திணிக்க நினைக்கும் நரேந்திர மோடிக்கு பயன் கிடைக்கும். மாநில கல்வியை படிப்பதில் பயன் இல்லை என்ற நிலைமை மக்கள் மனிதில் தோன்றும் அதனால் தமிழகம் எங்கும் CBSE பள்ளிகள் அதிகரிக்கும். கேரளா அரசு தற்போது மலையாளம் மொழி தங்கள் மாநிலத்தில் அழிந்து வருவதை உணர்ந்து கட்டாய மலையாள படத்தை பள்ளிகளில் படிக்க சட்டம் கொண்டுவந்துள்ளது இது அங்கு CBSE பள்ளிகள் அதிகரித்ததின் காரணமாக நடந்துள்ளது, இதே நிலையை இனி தமிழகம் எதிர்கொள்ள வேண்டிவரும். ஹிந்தியை எதிர்பே இல்லாமல் திணிக்கபடும் புது முறை தான் இந்த NEET.